சுகமான தென்றல்
சில்லென்று
முகத்தில் பட்டது!
அதிகாலை வேளை!
ரசிக்கத்தான்
நேரம் இல்லை!
இயந்திர யுகத்தின்
இரும்புக் கைகளில்
அகப்பட்டதனால்!
தென்றலின்
கவிதைகளை
ரசிக்க முடியாமல்
அடுப்பினின்று
கனன்று எரியும்
கனலின் கவிதை தனை
ரசிக்க போனேன்!
நேரம் ஓட
ஆரம்பித்தது!
நானும் துரத்த
ஆரம்பித்தேன்!
பேருந்துக்கு காத்திருக்க
மனம் விரும்பவில்லை!
நடக்க தொடங்கினேன்!
முன்னிரவு
ஆணி பதம் பார்த்த
பாதம் மறந்து!
பரிச்சய முகங்களின்
புன்சிரிப்புகள்!
நண்பர்களின் நலம்
விசாரிப்புகள்!
பள்ளி செல்ல அடம்
பிடிக்கும் குழந்தை!
அடித்து விரட்டும்
அம்மா!
கரும்பு சக்கையின்
கடி மணம்!
கோவில் மணி ஓசை!
சாலை அமைதியினின்று
விழிக்க ஆரம்பித்த
முன் காலை நேரம்!
வீசும் காற்றில்
சேலை தலைப்பு
சற்றே ஆட்டம் காட்ட!
அதனை பிடிக்கும்
போது தான் கண்டேன்!
சாலை ஓரம்
குடித்து விட்டு
கிடந்த இளைஞன்
ஒருவனை!
சற்றே
என் நாட்டையும்
நினைத்துக் கொண்டேன்!
2020 இல் வல்லரசாகுமா
இந்தியா?
என்று!
சில்லென்று
முகத்தில் பட்டது!
அதிகாலை வேளை!
ரசிக்கத்தான்
நேரம் இல்லை!
இயந்திர யுகத்தின்
இரும்புக் கைகளில்
அகப்பட்டதனால்!
தென்றலின்
கவிதைகளை
ரசிக்க முடியாமல்
அடுப்பினின்று
கனன்று எரியும்
கனலின் கவிதை தனை
ரசிக்க போனேன்!
நேரம் ஓட
ஆரம்பித்தது!
நானும் துரத்த
ஆரம்பித்தேன்!
பேருந்துக்கு காத்திருக்க
மனம் விரும்பவில்லை!
நடக்க தொடங்கினேன்!
முன்னிரவு
ஆணி பதம் பார்த்த
பாதம் மறந்து!
பரிச்சய முகங்களின்
புன்சிரிப்புகள்!
நண்பர்களின் நலம்
விசாரிப்புகள்!
பள்ளி செல்ல அடம்
பிடிக்கும் குழந்தை!
அடித்து விரட்டும்
அம்மா!
கரும்பு சக்கையின்
கடி மணம்!
கோவில் மணி ஓசை!
சாலை அமைதியினின்று
விழிக்க ஆரம்பித்த
முன் காலை நேரம்!
வீசும் காற்றில்
சேலை தலைப்பு
சற்றே ஆட்டம் காட்ட!
அதனை பிடிக்கும்
போது தான் கண்டேன்!
சாலை ஓரம்
குடித்து விட்டு
கிடந்த இளைஞன்
ஒருவனை!
சற்றே
என் நாட்டையும்
நினைத்துக் கொண்டேன்!
2020 இல் வல்லரசாகுமா
இந்தியா?
என்று!
No comments:
Post a Comment