ஒரு நாள் இரவு
ஊரே உறங்கி
கொண்டிருந்தது!
ஊரே உறங்கி
கொண்டிருந்தது!
மெதுவாக
தன் காதலியை
காண அவன்
திருடனைப் போல்
பதுங்கி வந்து கொண்டு
இருந்தான்!
இருளும் தன்
பரப்பை
அதிகரித்துக் கொண்டே போனது!
அவளும் மெல்ல
தன் வீட்டிலிருந்து
எட்டி பார்த்தாள்!
பார்வைகள் சங்கமித்தன!
காதல்
பெருக்கெடுத்தது!
அந்த வெள்ளம்
இரவையும் பகலாகிப் பார்த்தது!
இரவெல்லாம்
தன் காதலனிடம்
மயங்கி கிடந்த
அவளை மீட்க
ஆரம்பித்தது!
புலரும் காலை!
புணர்ச்சி அறுபட
காதலன்
விடை பெறத் துவங்கினான்!
ஏதோ மனதில் பட
அவனது பிரிவு புரிந்தது!
தங்க மாட்டதவளாய்
அவள் அமிழ்ந்து போனாள்!
நீரினுள்!
ஒரு காதல்
விடியலுக்குள் மரணம் எய்தியது!
அடுத்த நாள்
தன் காதலியை காண
அவன் வந்தான்!
அவளை காணாது
காத்திருக்க அரம்பித்தான்!
அவள் நினைவால்
தேய்ந்தான்!
இறுதியில் மாண்டும் போனான்!
அவனை அவள்
சந்தித்தாள்!
சொர்க்கத்தில்!
கடவுள் அவர்களுக்காய்
வரம் தந்தார்!
மீண்டும் ஜனிக்க!
ஜனித்தனர்!
இப்புவியில்!
காதலித்தனர்!
மீண்டும் மரணம்!
மீண்டும் ஜனிப்பு!
இறுதிவரை
காதல் இருந்ததால்!
அவள் ஒரு நாளும்
அறியவில்லை!
அவள் இல்லாத
அந்நாட்களில் அவன்
மற்றவளையும்
நேசித்தான்!
என்பதை!
( அல்லியையும் சந்திரனையும் பார்க்கையில் புரிந்த ஒரு புதிர்! )
காதலில் இருவரும் உண்மையாய் இருப்பதில்லை!
அல்லது ஒருவராவது உண்மையாய் இருப்பதில்லை!
சுயநலமாய் மாறிப் போகும்
இன்றைய காதல் மத்தியில்
காதலுக்காய் உயிர் துறந்த
ஹரின்-திலோத்தியை
நான் என்றும் மறப்பதில்லை!
No comments:
Post a Comment