நேற்றைய
கனவுகள்
முடிந்து
போவதில்லை!
போவதில்லை!
இன்றும் தொடர்கிறது!
நாளையும் தொடரும்!
உண்மையான
உறவுகள்
பிரிந்து போவதில்லை!
நிழலாகவும் வருகிறது!
காலடி தடங்களாகவும்
உருப்பெறுகிறது!
அன்பான
நெஞ்சங்கள்
அழிந்து போவதில்லை!
இருந்தாலும் உடன் வருகிறது!
இறந்தாலும் உடன் வருகிறது!
நன்மை பயக்கும்
நட்புக்கள்
மரத்து
போவதில்லை!
உறவை இழக்க நேரிட்டாலும்!
உயிரை இழக்க நேரிட்டாலும்!
யாருமே
தின்னாத
பழங்கள்
உண்டு!
யாருமே
என்னாத
மனிதர்களும்
உண்டு!
சுயநலமாய்
சுற்றி திரியும்
மனிதன்
இவை நான்கையும்
பெறுவதில்லை!
மாற்றார்
மகிழ்ச்சியில்
நிறைவு
கண்ட
மனிதனோ,
இவை
நான்கையும்
வெறுப்பதில்லை!
ஏனோ!
அவனைத்தான்
யாரும் நினைப்பதில்லை!
சாலையோர
அவன் இருப்பிடங்களை
கடந்து
போகையிலும் கூட!
No comments:
Post a Comment