Monday, January 31, 2011

இனிய இரவு!


ஓர்
இனிய இரவின்
பிறப்பு
ஒரு பக்கம்!

இழந்து போன
அன்றைய நாளின்
ஏக்கம்
பரவிக்கொண்டு இருக்கிறது!

ஊரே அமைதியில்
உறைந்து
போகும் தருணம்!

எங்கோ
ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
பசியில் அழும்
பச்சிளம் குழந்தையின்
அழுகையும்!
அதையெண்ணி விசும்பும்
ஒரு ஏழ்மை
தாயின் விசும்பலும்!

அதையும் மீறி
ஒரு அடுக்குமாடி
குடி இருப்பில்
ஆடம்பர விருந்து
அமர்களபடுகிறது!

அறுசுவை உணவு!
உண்ண ஆளில்லாமல்!

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை
அளிக்க வேண்டிய
பாரதி பிறந்த
பழம் பெரும் தமிழ்நாட்டில்
இன்றும் நிகழ்ந்து வரும்
பட்டினி சாவு!

தடுக்க ஆளுண்டோ?
வினாவும் வினாவாகிப்போகிறது!

அதற்க்கு விடை தேடும்
பொறுப்பாளர்கள்
ஆடம்பர விருந்தில்
அறுசுவை உணவருந்துவதால்!

உண்ண ஒரு கவளம்
தேடித்திரியும்
மாந்தரிடையே!

ஒரு கவளம் உண்டு
குப்பையில்
மீதம் எறியும்!
மாக்களும் உண்டு!

மதிப்பற்ற
நாகரிகம் அதனை
கருதிக்கொண்டு!
கனவில் வாழ்ந்து வரும்
இதயம் அற்ற இவர்கள்
குரல் அடக்கிப்போகிறது!

குழந்தையின் அழுகையையும்
தாயின் விசும்பலையும்!

No comments:

Post a Comment