அன்புள்ள ஆண்களே!
நீங்கள் அடிமைகளாக
நினைத்துக் கொண்டிருக்கும்
பெண்களின் மடல் இது!
விட்டு கொடுத்து
அடிமைப் பட்டம்
வாங்கிக்கொண்ட
பெருந்தகையர் நாங்கள்!
எங்களின் மென்மையை
படுக்கையில் காட்டும்
நாங்களே
எங்களின் வண்மையை
போரிலும் காட்டி இருக்கிறோம்!
மென்கரம் பற்றி
உங்கள் இல்லம்
புகுந்த நாங்கள்
அக்கரத்தால்
புரிந்த யுத்தம் பல!
சற்றே திரும்பி
பாருங்கள்
நம் தேச வரலாற்றை!
மகாராணிகளாய்
மகுடம் தரித்து
ஆண்டு வந்த
கதைகள் பல உண்டு!
அடுப்படியில் அடைந்து
கிடப்பது
அடிமை பதவிக்காக அல்ல!
உங்கள் அன்பிற்காக!
இங்கு உங்களை
சுமந்ததும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
சுமப்பதும் நாங்களே!
உங்கள் வாரிசுகளை
பெற்று தருவதும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
மனிதனாக்குவதும் நாங்களே!
மகளாய், சகோதரியாய்,
காதலியாய், மனைவியாய்,
மருமகளாய், தாயாய்,
தோழியாய், ஆசிரயையாய்,
என யாவுமாய்
உங்களோடு வாழ்ந்து
வருகிறோம்!
உங்களிடம் நாங்கள்
வேண்டுவது
பொன்னும் பொருளும் அல்ல!
அன்பும், அனுசரனையும் தான்!
பார்த்து பார்த்து
அலுத்து களைத்து
சமைத்த உணவிற்கு
ஒற்றை வார்த்தையில்,
'நல்லாயிருக்கு'
என்ற மணிமகுடம்!
வீட்டு வேலைகளில்
உதவி அல்ல!
'மறுபடியும் செய்யேன்!'
என்ற ஒற்றை வரி!
மாதம் இருமுறை
படத்திற்கோ,
வேறு எங்கோ
அழைத்து செல்ல வேண்டாம்!
மாறாக
எங்கள் பிறந்த நாளின்
முதல் மணித்துளியில்
வாழ்த்தும்
ஒற்றை முத்தமும்!
உங்கள் களைப்பை
எங்கள் மீது
சுமத்துவதை நாங்கள்
மறுக்கவில்லை!
எங்களது களைப்பினை
நாங்கள் யார் மீது சுமத்த?
உங்கள் வானில்
நாங்கள் விடியல் தந்தோம்!
எங்கள் வானில்
விடியல் தர
முனைவீர்களா!
ஒரு நாளேனும்
சிந்தியுங்கள்!
என் மனைவிக்கு
எது பிடிக்கும்?
என் மகள்
எதை விரும்புவாள்?
என் தங்கைக்கு
பிடித்த உடை எது?
என் அம்மாவிற்கு
எத்தனை வயது?
என் காதலி
என்ன செய்வாள்?
என்ற கேள்விகளின்
வழியாக!
அப்போது கிடைக்கும்
எங்களது வானிற்கு
உண்மையான விடியல்!
நீங்கள் அடிமைகளாக
நினைத்துக் கொண்டிருக்கும்
பெண்களின் மடல் இது!
விட்டு கொடுத்து
அடிமைப் பட்டம்
வாங்கிக்கொண்ட
பெருந்தகையர் நாங்கள்!
எங்களின் மென்மையை
படுக்கையில் காட்டும்
நாங்களே
எங்களின் வண்மையை
போரிலும் காட்டி இருக்கிறோம்!
மென்கரம் பற்றி
உங்கள் இல்லம்
புகுந்த நாங்கள்
அக்கரத்தால்
புரிந்த யுத்தம் பல!
சற்றே திரும்பி
பாருங்கள்
நம் தேச வரலாற்றை!
மகாராணிகளாய்
மகுடம் தரித்து
ஆண்டு வந்த
கதைகள் பல உண்டு!
அடுப்படியில் அடைந்து
கிடப்பது
அடிமை பதவிக்காக அல்ல!
உங்கள் அன்பிற்காக!
இங்கு உங்களை
சுமந்ததும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
சுமப்பதும் நாங்களே!
உங்கள் வாரிசுகளை
பெற்று தருவதும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
மனிதனாக்குவதும் நாங்களே!
மகளாய், சகோதரியாய்,
காதலியாய், மனைவியாய்,
மருமகளாய், தாயாய்,
தோழியாய், ஆசிரயையாய்,
என யாவுமாய்
உங்களோடு வாழ்ந்து
வருகிறோம்!
உங்களிடம் நாங்கள்
வேண்டுவது
பொன்னும் பொருளும் அல்ல!
அன்பும், அனுசரனையும் தான்!
பார்த்து பார்த்து
அலுத்து களைத்து
சமைத்த உணவிற்கு
ஒற்றை வார்த்தையில்,
'நல்லாயிருக்கு'
என்ற மணிமகுடம்!
வீட்டு வேலைகளில்
உதவி அல்ல!
'மறுபடியும் செய்யேன்!'
என்ற ஒற்றை வரி!
மாதம் இருமுறை
படத்திற்கோ,
வேறு எங்கோ
அழைத்து செல்ல வேண்டாம்!
மாறாக
எங்கள் பிறந்த நாளின்
முதல் மணித்துளியில்
வாழ்த்தும்
ஒற்றை முத்தமும்!
உங்கள் களைப்பை
எங்கள் மீது
சுமத்துவதை நாங்கள்
மறுக்கவில்லை!
எங்களது களைப்பினை
நாங்கள் யார் மீது சுமத்த?
உங்கள் வானில்
நாங்கள் விடியல் தந்தோம்!
எங்கள் வானில்
விடியல் தர
முனைவீர்களா!
ஒரு நாளேனும்
சிந்தியுங்கள்!
என் மனைவிக்கு
எது பிடிக்கும்?
என் மகள்
எதை விரும்புவாள்?
என் தங்கைக்கு
பிடித்த உடை எது?
என் அம்மாவிற்கு
எத்தனை வயது?
என் காதலி
என்ன செய்வாள்?
என்ற கேள்விகளின்
வழியாக!
அப்போது கிடைக்கும்
எங்களது வானிற்கு
உண்மையான விடியல்!
No comments:
Post a Comment